search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    சேலத்தில் டிரைவர் மர்ம மரணம்- கொலையா? போலீசார் விசாரணை

    சேலத்தில் டிரைவர் மர்மமான முறையில் இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சேலம்:

    சேலத்தில் டிரைவர் மர்மமான முறையில் இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

    சேலம் பெரமனூர் 40 அடி ரோடு பகுதியை சேர்ந்தவர் ரகுமான் (வயது 41). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆயில் மில்லில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு வஜிதா பானு என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். மனைவி மற்றும் மகன்கள் தம்மம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தனர்.

    ரகுமான் மட்டும் வீட்டில் இருந்தார். இந்த நிலையில் நேற்று காலை வெகு நேரம் ஆகியும் வீடு திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர் அவரது வீட்டு ஜன்னல் வழியாக பார்த்து உள்ளனர். அப்போது ரகுமான் மர்மமான முறையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து அவர்கள் பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் உதவி கமிஷனர் நாகராஜன், இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். ரகுமான் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் வழக்குப்பதிவு செய்து அவரை யாராவது கொலை செய்தார்களா? அல்லது சாவுக்கு வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×