என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
5 நாட்களுக்கு ஆன்-லைன் வகுப்புகள் நிறுத்தம்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
கோபி:
கோபி அருகே உள்ள வெள்ளாங்கோயிலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க வருகிற 21-ந் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தப்படுகிறது. எனவே 5 நாட்களுக்கு ஆன் லைன் வகுப்புகள் நடத்தக் கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதனை வட்ட அளவில் கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் ஆய்வு செய்து கண்காணிப்பார்கள். கொரோனா பாதிப்பு குறைந்த பின்னர் தான் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும்.
பகுதி நேர நூலகங்களை முழு நேர நூலகங்களாக மாற்றம் செய்ய துறை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.
விதிகளை மீறியதாக பள்ளிகள் மீது புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்