search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    லாட்டரி சீட்டு விற்ற 4 பேர் கைது

    கிருஷ்ணகிரி அருகே லாட்டரி சீட்டு விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் திம்மாபுரம் ஏரிக்கரை பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற நாகராஜபுரத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 34) என்பவரை காவேரிப்பட்டணம் போலீசார் கைது செய்தனர். நாகரசம்பட்டி போலீசார் பொன்னிஅம்மன் கோவில் அருகில் ரோந்து சென்ற போது, அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற அரசம்பட்டி செந்தில்குமார் (56), எம்.ஜி.ஹள்ளி ஹரிகரன் (21) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மத்தூர் போலீசார் அத்திகானூர் கூட்டுரோடு அருகில் ரோந்து சென்றபோது அங்கு லாட்டரி சீட்டு விற்ற அத்திகானூர் தங்கவேல் (55) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×