search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அறந்தாங்கி அருகே விவசாயி வெட்டிக்கொலை - தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்

    தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த விவசாயி அறந்தாங்கி அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அறந்தாங்கி:

    தஞ்சாவூர் மாவட்டம் கொளக்குடி கிராமத்தை சேர்ந்தவர் அய்யாவு. இவரது மகன் விநாயகமூர்த்தி (வயது 38). இவருக்கு அய்யம்மாள் என்ற மனைவியும், சாரதி (10), சபரி (8) என்ற 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் விநாயகமூர்த்தி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மங்களநாடு கிராமத்தில் உள்ள ஒரு மாந்தோப்பில் கொட்டகை அமைத்து வசித்து வந்தார். மேலும் அவர் விவசாய வேலைக்கு சென்று வந்ததாக தெரிகிறது.

    நேற்று முன்தினம் இரவு கொட்டகையில் விநாயகமூர்த்தி அரிவாளால் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். தனியாக இருந்த அவரை யாரோ மர்மநபர்கள் கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளனர். இதைபார்த்த அந்த பகுதியினர் நாகுடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜிசரவணன், அறந்தாங்கி போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயசீலன், இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், நாகுடி சப்-இன்ஸ்பெக்டர் திருஞானம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் விநாயகமூர்த்தியின் உடலை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    புதுக்கோட்டையில் இருந்து வந்த கை விரல்ரேகை நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். இது குறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விநாயகமூர்த்தியை கொலை செய்த மர்மநபர்கள் யார்?, எதற்காக கொலை செய்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×