என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடன் தொல்லையால் பெண் மாயம்- போலீசார் விசாரணை
Byமாலை மலர்6 Sep 2020 9:29 AM GMT (Updated: 6 Sep 2020 9:29 AM GMT)
காரைக்குடியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் பெண் மாயமானார். இந்த சம்பவம் குறித்து அவரது கணவர் போலீசார் புகார் அளித்துள்ளார்.
காரைக்குடி:
காரைக்குடி சூடாமணிபுரத்தை சேர்ந்தவர் நாகராஜன். இவர் ரெயில்வே சாலையில் வெல்டிங் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மலர்க்கொடி(வயது 37). இவர் தனக்கு தெரிந்தவர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினரிடம் ரூ.3 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளார். கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் தனது கணவரிடமும், அவரது தாயாரிடமும் நான் வெளியூர் சென்று சம்பாதித்து வந்து கடனை அடைக்கிறேன் என்று கூறிவிட்டு சென்று விட்டார். அதன்பின் அவர் எங்கிருக்கிறார், எப்படி இருக்கிறார் என்ற விவரமும் தெரியவில்லை, அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.
இதுகுறித்து அவரது கணவர் நாகராஜன் காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கடன் தொல்லையால் மாயமானவரை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X