என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அருப்புக்கோட்டையில் மூதாட்டியிடம் 20 பவுன் நகை பறிப்பு
Byமாலை மலர்5 Sep 2020 1:57 PM GMT (Updated: 5 Sep 2020 1:57 PM GMT)
அருப்புக்கோட்டையில் மூதாட்டியிடம் 20 பவுன் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை:
அருப்புக்கோட்டை கீழவீட்டார் தெருவைச் சேர்ந்தவர் பிள்ளையார். இவரது மனைவி பொன்னம்மாள் (வயது 85). கணவர் இறந்த நிலையில் பொன்னம்மாள் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் சாப்பாடு கொடுப்பதற்காக பொன்னம்மாளின் வீட்டுக்கு அவரது உறவினர் ராஜலட்சுமி சென்றார். அப்போது அவர் உணர்ச்சியற்ற நிலையில் கிடந்தார். அவரது 20 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜலட்சுமி அருப்புக்கோட்டை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே போலீஸ் துணை சூப்பிரண்டு சகாய ஜோஸ், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் வந்து விசாரணை நடத்தினர். இதில் மூதாட்டி பொன்னம்மாள் வெளிநபர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து வந்துள்ளார். அவரிடம் பணம் மற்றும் நகைகள் இருப்பதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் தனியாக இருந்த அவரை தாக்கி நகைகளை அபேஸ் செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது.
இது குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டிற்கு வந்து செல்லும் நபர்கள் மற்றும் அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X