என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல்லில் நிவாரணம் கேட்டு நாடக நடிகர்கள் சாலை மறியல்
Byமாலை மலர்5 Sep 2020 7:06 AM GMT (Updated: 5 Sep 2020 7:06 AM GMT)
திண்டுக்கல்லில் கொரோனா நிவாரணம் கேட்டு நாடக நடிகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் சுமார் 250 நாடக நடிகர்கள் உள்ளனர். நாடக தொழில் நலிவடைந்து விட்டதால், போதிய வருமானமின்றி தவிக்கின்றனர். இதனால் கோவில் திருவிழாக்களில் நடத்தப்படும் புராணம், சமூக நாடகங்கள் மூலம் சொற்ப வருமானத்தை ஈட்டி வந்தனர். இதற்கிடையே கொரோனா ஊரடங்கால் கோவில்கள் கடந்த 5 மாதங்களாக திறக்கப்பட வில்லை. கோவில் திருவிழாக்களும் நடைபெறவில்லை. இதனால் நாடக நடிகர்கள் வேலையின்றி வருமானத்தை இழந்தனர். எனவே வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி திண்டுக்கல் நாடக நடிகர்கள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். எனினும், நிவாரணம் வழங்கப்படவில்லை. இதனால் நாடக நடிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்தநிலையில் நேற்று திண்டுக்கல் சாலை ரோடு பகுதியில் உள்ள சங்க அலுவலகத்தில் நாடக நடிகர்கள் திரண்டனர். இதையடுத்து சங்க அலுவலகத்தில் இருந்து சாலை ரோட்டுக்கு வந்த அவர்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அதில் சில நடிகர்கள் வேடம் அணிந்து இருந்தனர். இந்த மறியலால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நாடக நடிகர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், கோவில் திருவிழாவில் நாடகங்கள் நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும், திண்டுக்கல்லில் கலை பண்பாட்டு மையம் அமைத்தல் மற்றும் வயதான நடிகர்களுக்கு தாமதமின்றி உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நாடக நடிகர்கள் வலியுறுத்தினர். இந்த கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நாடக நடிகர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X