search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயிரிழப்பு
    X
    உயிரிழப்பு

    மாடி படிக்கட்டில் தவறி விழுந்த கட்டிட தொழிலாளி பலி

    வில்லியனூர் அருகே குடிபோதையில் மாடி படிக்கட்டில் தவறி விழுந்த கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வில்லியனூர்:

    வளவனூர் அருகே குமாரக்குப்பம் கலைஞர் நகரை சேர்ந்தவர் அய்யனார் (வயது25). கட்டிட தொழிலாளி இவர் வில்லியனூர் அருகே உருவையாறில் தங்கி புதிதாக கட்டி வரும் ஒரு வீட்டில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார். அய்யனாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.

    சம்பவத்தன்று அய்யனார் மதுகுடித்து விட்டு குடிபோதையில் தான் தங்கியிருக்கும் வீட்டுக்கு பதிலாக அருகில் புதிதாக கட்டி வரும் மற்றொரு வீட்டின் படிக்கட்டில் ஏற முயன்றார்.

    அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அய்யனாரை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அய்யனார் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, ஏட்டு கருணாகரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×