என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாடி படிக்கட்டில் தவறி விழுந்த கட்டிட தொழிலாளி பலி
Byமாலை மலர்4 Sep 2020 10:15 AM GMT (Updated: 4 Sep 2020 10:15 AM GMT)
வில்லியனூர் அருகே குடிபோதையில் மாடி படிக்கட்டில் தவறி விழுந்த கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வில்லியனூர்:
வளவனூர் அருகே குமாரக்குப்பம் கலைஞர் நகரை சேர்ந்தவர் அய்யனார் (வயது25). கட்டிட தொழிலாளி இவர் வில்லியனூர் அருகே உருவையாறில் தங்கி புதிதாக கட்டி வரும் ஒரு வீட்டில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார். அய்யனாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.
சம்பவத்தன்று அய்யனார் மதுகுடித்து விட்டு குடிபோதையில் தான் தங்கியிருக்கும் வீட்டுக்கு பதிலாக அருகில் புதிதாக கட்டி வரும் மற்றொரு வீட்டின் படிக்கட்டில் ஏற முயன்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அய்யனாரை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அய்யனார் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, ஏட்டு கருணாகரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வளவனூர் அருகே குமாரக்குப்பம் கலைஞர் நகரை சேர்ந்தவர் அய்யனார் (வயது25). கட்டிட தொழிலாளி இவர் வில்லியனூர் அருகே உருவையாறில் தங்கி புதிதாக கட்டி வரும் ஒரு வீட்டில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார். அய்யனாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.
சம்பவத்தன்று அய்யனார் மதுகுடித்து விட்டு குடிபோதையில் தான் தங்கியிருக்கும் வீட்டுக்கு பதிலாக அருகில் புதிதாக கட்டி வரும் மற்றொரு வீட்டின் படிக்கட்டில் ஏற முயன்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அய்யனாரை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அய்யனார் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, ஏட்டு கருணாகரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X