என் மலர்
செய்திகள்

ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா பரிசோதனை
புதுச்சேரி:
புதுவையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள விஞ்ஞானிகள் கமிட்டி அறிவுறுத்தியது.
இதனை தொடர்ந்து தனியார் கல்லூரி டாக்டர்கள் அடங்கிய 2 குழுவை புதுவை அரசு நியமித்துள்ளது. இந்த குழுவினர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உமிழ்நீர் பரிசோதனை செய்ய உள்ளனர்.
லட்சுமி நாராயணா மருத்துவக்கல்லூரி குழுவினர் இன்று (செவ்வாய்க்கிழமை) மேட்டுப்பாளையம், ரெட்டியார்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், அறுபடை வீடு மருத்துவக்கல்லூரி குழுவினர் லாஸ்பேட்டை, குயவர்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் பரிசோதனை நடத்துகின்றனர்.
நாளை (2-ம் தேதி) லட்சுமி நாராயணா மருத்துவக்கல்லூரி குழுவினர் திருக்கனூர், கூடப்பாக்த்திலும், 3-ந் தேதி திருபுவனை, நெட்டப்பாக்கத்திலும் பரிசோதனை மாதிரிகளை சேகரிக்கின்றனர்.
அறுபடை வீடு மருத்துவக் கல்லூரி குழுவினர் நாளை (2-ந் தேதி) பாகூர், அரியாங்குப்பத்திலும், 3-ந் தேதி அபிஷேகப்பாக்கம், கிருமாம்பாக்கத்திலும் பரிசோதனை நடத்தவுள்ளனர். இந்த மாதிரிகளை ஜிப்மரில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.






