என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஊத்தங்கரை அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்- கட்டிட மேஸ்திரி கைது

    ஊத்தங்கரை அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியிடம் உல்லாசம் அனுபவித்த கட்டிட மேஸ்திரி கைது செய்யப்பட்டார்.
    ஊத்தங்கரை:

    ஊத்தங்கரை அருகே கல்லாவியை அடுத்த வீரணகுப்பம் பகுதியை சேர்ந்தவர் அரிதாஸ் (வயது 26). கட்டிட மேஸ்திரி. இவர் கல்லாவி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அடிக்கடி அருகில் உள்ள ஈச்சம்பாடி அணை பாசன கால்வாய் பகுதிக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்தார். 

    இந்த நிலையில் அந்த சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரது பெற்றோர்கள் அந்த சிறுமியை நேற்று முன்தினம் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது அங்கு பரிசோதனை செய்த டாக்டர், அந்த சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறினார்கள். 

    இது குறித்து அந்த சிறுமியிடம் விசாரித்த போது, இதற்கு காரணம் அரிதாஸ் என்றும் கூறினார். இதையடுத்து அந்த சிறுமி கல்லாவி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வன் வழக்குப்பதிவு செய்து, அரிதாசை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
    Next Story
    ×