என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வேதாரண்யம் அருகே குண்டர் சட்டத்தில் 5 பேர் கைது

    வேதாரண்யம் அருகே குண்டர் சட்டத்தில் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த ஆயக்காரம்புலம் 2-ம் சேத்தி கிராமத்தை சேர்ந்தவர் வீரையன் (வயது 50).

    சம்பவத்தன்று இவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றபோது வழிமறுத்தி நிறுத்தி பழனிவேல் (35), அரவிந்தன் (27), பிரவீன் (23), மூர்த்தி (20), வின்னேஷ் (26) ஆகிய 5 பேர் சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த வீரையன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

    இது குறித்த புகாரின்பேரில் வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அரவிந்தன், பழனிவேல் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளது. இதனால் அவர்களின் குற்றசெயல்களை கட்டப்படுத்தும் நோக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் பிரவீன் பி நாயரிடம், போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் பரிந்துரை செய்தார். அதனை ஏற்று கலெக்டர் உத்தரவுப்படி, பழனிவேல் உள்ளிட்ட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

    Next Story
    ×