என் மலர்
செய்திகள்

கவர்னர் கிரண்பேடி
கொரோனா பாதிப்புகளை மத்திய அரசு கண்காணிக்கிறது- கவர்னர் தகவல்
புதுச்சேரியை மத்திய அரசு கண்காணிக்கிறது என்று கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவையில் கொரோனா தொற்று பரவல் குறித்து மத்திய விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ குழு ஆய்வு செய்து தனது பரிந்துரையை வழங்கியுள்ளது. இந்தநிலையில் கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
கொரோனா பரிசோதனைகளை அதிகரிப்பதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறையும். வீடுவீடாக ஆய்வுகள் நடத்தப்பட்டு பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய வேண்டும். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் சோதனை வசதிகளை செய்யவேண்டும். உள்ளூர் ஊரடங்கினை சரியாக அமல்படுத்தவேண்டும். மத்திய உள்துறை அமைச்சகமானது புதுவை கொரோனா பாதிப்புகளை நாள்தோறும் தீவிரமாக கண்காணித்து வருகிறது.
இவ்வாறு கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.
Next Story






