என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுபானங்களுக்கு மேலும் 3 மாதங்களுக்கு கொரோனா வரி- கவர்னர் ஒப்புதல்
Byமாலை மலர்24 Aug 2020 6:22 AM GMT (Updated: 24 Aug 2020 6:22 AM GMT)
புதுச்சேரியில் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட கொரோனா வரி மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் மூடப்பட்ட மதுக்கடைகள் மே மாதம் 25-ந்தேதி திறக்கப்பட்டது. அப்போது தமிழகத்துக்கு இணையாக வரிகள் இருந்தால்தான் தமிழக பகுதியில் இருந்து மதுபானம் வாங்க புதுச்சேரிக்கு வரமாட்டார்கள் என்ற அடிப்படையில் கூடுதல் வரி விதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தமிழக மதுபானங்களுக்கு நிகராக விலை இருக்குமாறு புதுவை மதுபானங்களுக்கும் கோவிட் வரி விதிக்கப்பட்டது. இந்த விலை உயர்வு புதுவை மதுபிரியர்களின் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வரி விதிப்பு இன்றுடன் (திங்கட்கிழமை) நிறைவடைகிறது.
இந்த நிலையில் கொரோனா தொற்று தொடர்ந்து வருவதால் கோவிட் வரி மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அரசு அனுப்பிய கோப்பிற்கு கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார். அதேபோல் மின்துறை, காவல்துறை, நிதித்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த 28 கோப்புகளுக்கும் கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X