என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்தடை
    X
    மின்தடை

    அரியாங்குப்பம், ரெட்டியார் பாளையம் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள்

    அரியாங்குப்பம், ரெட்டியார்பாளையம் பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுவதாக மின்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மரப்பாலம் துணை மின்நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை ஆனந்தாநகர், திருமால்நகர், வேல்ராம்பட்டு, துலுக்கானத்தம்மன் நகர், அரவிந்தர் நகர், சுதானா நகர், அங்காளம்மன் நகர், முருங்கப்பாக்கம் பேட், ஒட்டன்பாளையம், ஆசிரியர் காலனி, பாப்பாஞ்சாவடி குப்பம் மற்றும் கொம்பாக்கம் பேட் ஆகிய இடங்களில் மின்சார நிறுத்தம் செய்யப்படும்.

    மதியம் 1 மணி முதல் மாலை 4.30 மணி வரை முருங்கப்பாக்கம், நைனார்மண்டபம், சுதானாநகர் (ஒரு பகுதி), மூகாம்பிகை நகர், கிழக்கு வாசல் நகர், கணபதி நகர், சேத்திலால் நகர், பள்ளத்தெரு, மகாலட்சுமி நகர், அரியாங்குப்பம், மணவெளி, ஒடவெளி, நோணாங்குப்பம், காக்காயந்தோப்பு, வீராம்பட்டினம், சின்னவீராம்பட்டினம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும்.

    வில்லியனூர் -சேதராப்பட்டு மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 10 மணி முதல் 1 மணி வரை கோபாலன்கடை, முத்துபிள்ளைபாளையம், பிச்சவீரன்பட்டு, ராதாகிருஷ்னன் நகர், பாவேந்தர் நகர், சுப்பிரமணியபாரதி நகர், காரைகோவிந்தன் நகர், ரெட்டியார்பாளையம், அஜீஸ் நகர், அரவிந்தர் நகர், சின்னசாமி நகர், சத்திய சாய் நகர், பாரிஸ் நகர், பூமியான்பேட், ஜவகர் நகர், சிவா நகர், சுதாகர் நகர், பவழக்காரன்சாவடி பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

    இதேபோல் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை வம்பாகீரப்பாளையம் முழுவதும் மின்சார நிறுத்தம் செய்யப்படும்.

    மேற்கண்ட தகவல் மின்துறை செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×