என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஷம்
    X
    விஷம்

    விராலிமலை அருகே குடும்பத்தகராறில் விஷம் குடித்து முதியவர் தற்கொலை

    விராலிமலை அருகே குடும்பத்தகராறில் விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம் வேலூரை சேர்ந்தவர் நல்லுசாமி(வயது 70). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சரோஜா(65). இவர்களுடைய மகன் சுந்தரம். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஆண் குழந்தை உள்ளது. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

    இந்நிலையில் குடும்பத்தகராறு காரணமாக நேற்று முன்தினம் மாலை அவர்களுடைய வீட்டில் நல்லுசாமியும், சரோஜாவும் விஷம் குடித்து மயங்கி கிடந்தனர். இதை பார்த்த உறவினர்கள், 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக விராலிமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் வழியிலேயே நல்லுசாமி பரிதாபமாக இறந்தார். மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சரோஜா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி தகவல் அறிந்த விராலிமலை போலீசார் நல்லுசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×