என் மலர்
செய்திகள்

தற்கொலை
புதுவையில் 3-வது மனைவியும் பிரிந்து சென்றதால் தொழிலாளி தற்கொலை
3-வது மனைவியும் பிரிந்து சென்றதால் ஜிப்மர் குடியிருப்பில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை ஜிப்மர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 32). தஞ்சையை பூர்வீகமாக கொண்ட இவர் ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். அவர்கள் சிலம்பரசனுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் பிரிந்து சென்று விட்டனர்.
இந்த நிலையில் மதுரையை சேர்ந்த ஒரு கற்பகம் என்பவரை 3-வதாக சிலம்பரசன் திருமணம் செய்துகொண்டு, ஜிப்மர் குடியிருப்பில் வசித்து வந்தார். கற்பகத்துடன் அவருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக்கொண்ட கற்பகம் தனது சொந்த ஊருக்கு சென்றதாக கூறப்படுகிறது.
3-வது மனைவியும் பிரிந்து சென்றதால் மனவேதனை அடைந்த சிலம்பரசன் வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் தனது கைப்பட கடிதம் ஒன்றையும் எழுதி வைத்திருந்தார். அதில் ‘தனது சாவுக்கு யாரும் காரணமில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






