என் மலர்
செய்திகள்

கைது
ஊட்டி அருகே மது விற்ற 4 பேர் கைது
ஊட்டி அருகே மது விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊட்டி:
சுதந்திர தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மேலும் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது, மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் ஊட்டி சர்ச்ஹில் பகுதியில் 2 பேர் மதுபானங்களை விற்பனை செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த ஊட்டி மேற்கு நகர போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் நேதாஜி நகரை சேர்ந்த சிவகுமார் (வயது 45), மெயின் பஜாரை சேர்ந்த புட்டே கவுடர் (31) ஆகியோர் என்பது தெரியவந்தது. பின்னர் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதேபோன்று பந்தலூர் அருகே அத்திக்குன்னா பகுதியில் தர்மராஜ்(37), தொண்டியாளம் பகுதியில் சிவபெருமாள்(67) ஆகியோர் மது விற்றதாக கைது செய்யப்பட்டனர்.
Next Story






