என் மலர்
செய்திகள்

தற்கொலை
குன்னூர் அருகே பயிற்சி முகாமில் ராணுவ அதிகாரி தற்கொலை
குன்னூர் அருகே பயிற்சி முகாமில் ராணுவ அதிகாரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
குன்னூர்:
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் பிரான்சிஸ் அமிர்தராஜ் (வயது 48). இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். பிரான்சிஸ் அமிர்தராஜ் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் எம்.ஆர்.சி. ராணுவ முகாமின் கிளை பயிற்சி முகாமான அவாஹில்லில் சுபேதாராக பணியாற்றி வந்தார். மேலும் முகாமிற்கு வரும் இளம் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி கொடுக்கும் அதிகாரியாக உள்ளார்.
இந்த நிலையில் அவாஹில் ராணுவ முகாம் வளாகத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அமைக்கப்பட்ட இரும்பு ஏணியில் நேற்று பிரான்சிஸ் அமிர்தராஜ் தனது லுங்கி மூலம் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்த சக ராணுவ அதிகாரிகள், வெலிங்டன் எம்.ஆர்.சி. ராணுவ முகாம் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் உள்ள அதிகாரிகள் வெலிங்டன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து வெலிங்டன் போலீசார் அவாஹில் ராணுவ முகாமிற்கு விரைந்து சென்று, ராணுவ அதிகாரி பிரான்சிஸ் அமிர்தராஜின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story






