என் மலர்
செய்திகள்

விபத்து பலி
இளையான்குடி அருகே லாரி மோதி பெண் பலி
இளையான்குடி அருகே லாரி மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளையான்குடி:
இளையான்குடி அருகே உள்ள இந்திரா நகரை சேர்ந்த முனியசாமி மனைவி தனலட்சுமி (வயது38). இவர் தனது மகன் ஹாரிஸ் உடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே பரமக்குடி நோக்கி வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்கள் சிகிச்சைக்காக இளையான்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி தனலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் மணிகண்டனை கைது செய்தனர்.
Next Story






