search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    புதுச்சேரியில் மேலும் 369 பேருக்கு கொரோனா பாதிப்பு

    புதுச்சேரியில் ஒரே நாளில் 369 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,355 ஆக உயர்ந்துள்ளது.
    புதுச்சேரி:

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
     
    இந்நிலையில், புதுச்சேரியில் ஒரே நாளில் 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,355 ஆக உயர்ந்துள்ளது. 

    தற்போது 1,853 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும் 1,172 பேர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இதுவரை 106 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கொரோனா சிகிச்சை முடிந்து இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4,224 ஆக அதிகரித்துள்ளது என புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    Next Story
    ×