என் மலர்
செய்திகள்

மின்சார நிறுத்தம்
ராமராஜபுரம் பகுதியில் 19-ந்தேதி மின்தடை
ராமராஜபுரம் பகுதியில் 19-ந்தேதி மின்தடை செய்யப்படுவதாக நிலக்கோட்டை மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் நவநீதன் தெரிவித்தார்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் ராமராஜபுரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 19-ந்தேதி (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி ராமராஜபுரம், மட்டபாறை, விளாம்பட்டி, குல்லலக்குண்டு, கல்லடிபட்டி, கரட்டுப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை நிலக்கோட்டை மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் நவநீதன் தெரிவித்தார்.
Next Story