என் மலர்

    செய்திகள்

    கைது
    X
    கைது

    செல்போனில் ஆபாச படம் காட்டி சிறுமி பலாத்காரம்- போக்சோவில் முதியவர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கோபியில் செல்போனில் ஆபாச படம் காட்டி சிறுமியை பலாத்காரம் செய்த முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபி பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 74). சம்பவத்தன்று இவரது வீட்டின் அருகே 8 வயது சிறுமி விளையாடி கொண்டிருந்தாள். இதனைப்பார்த்த சண்முகம் அந்த சிறுமியிடம் நைசாக பேச்சுக்கொடுத்தார். பின்னர் அவர் தனது செல்போனில் இருந்த ஆபாச படங்களை பார்க்கும்படி சிறுமியிடம் காட்டியுள்ளார்.

    ஆனால் அந்த சிறுமி பார்க்க மறுத்துள்ளார். பின்னர் சண்முகம் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதுபற்றி சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதார். உடனே அவர்கள் இதுபற்றி கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    அதன்பேரில் போலீசார் சண்முகம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
    Next Story
    ×