search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா விழிப்புணர்வு
    X
    கொரோனா விழிப்புணர்வு

    கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்

    தா.பழூர் கடைவீதியில் மாவட்ட கலெக்டர் ரத்னா உத்தரவின்பேரில் மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
    தா.பழூர்:

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் கடைவீதியில் மாவட்ட கலெக்டர் ரத்னா உத்தரவின்பேரில் மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் தலைமையில் முடநீக்கியல் வல்லுனர் ராமன் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

    கலைக்குழுவினர் தா.பழூர் கடைவீதியில் கலை நிகழ்ச்சி மூலம் பாடல்களை பாடி பொதுமக்களிடம் கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முககவசம் அணியாமல் நடந்து சென்றவர்களுக்கு கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, முககவசம் வழங்கப்பட்டது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வழங்கப்படும் உதவித்தொகை பற்றியும், அதை மாற்றுத்திறனாளிகள் வாங்கி பயனடைய வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    Next Story
    ×