என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாகை மாவட்டத்தில் 486 ரேசன் கடைகள் அடைப்பு
Byமாலை மலர்11 Aug 2020 11:08 AM GMT (Updated: 11 Aug 2020 11:08 AM GMT)
நாகை தாலுகா அலுவலகம் முன்பு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை தாலுகா அலுவலகம் முன்பு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு நாகை மாவட்ட தலைவர் தமிழ்செழியன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் பிரகாஷ், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் பாஸ்கர், மாவட்ட செயலாளர் சுரேஷ்கண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் சிவக்குமார் கலந்துகொண்டு பேசினார். கொரோனா காலத்தில் உயிரிழந்த ரேசன்கடை பணியாளர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அனைத்து அத்தியாவசிய பொருட்கள் 100 சதவீதம் வழங்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் சரியான எடையில் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் பொருளாளர் ராஜா நன்றி கூறினார். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒருநாள் நாகை மாவட்டத்தில் உள்ள 486 ரேஷன் கடைகள் அடைக்கப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X