search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    முதலியார்பேட்டையில் தூக்குப்போட்டு பெயிண்டர் தற்கொலை

    முதலியார்பேட்டையில் தூக்குப்போட்டு பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி முதலியார்பேட்டை தில்லைநகர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 42). பெயிண்டர். இவருக்கு யோகேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். பாலமுருகன் சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்துவந்தார். சம்பவத்தன்று தனது மனைவியிடம் மது குடிக்க பாலமுருகன் பணம் கேட்டுள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபித்துக்கொண்டு யோகேஸ்வரி தனது மகளை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள சகோதரி வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    மனைவியும், மகளும் பிரிந்து சென்றதால் மனவேதனை அடைந்த பாலமுருகன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×