search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சிறுமி பாலியல் பலாத்காரம் - போக்சோ சட்டத்தில் 2 பேர் மீது வழக்கு

    ஜெயங்கொண்டம் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக போக்சோ சட்டத்தில் போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள மேலநெடுவாய் கிராமத்தை சேர்ந்த மோகன்குமாரின் மகன் விஜயகுமார்(வயது 25). இவர், 18 வயது சிறுமியை விருத்தாசலம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. 

    இது குறித்து அந்த சிறுமி, விஜகுமார் மீதும், உடந்தையாக இருந்ததாக விஜயகுமாரின் நண்பர் சதீஷ் மீதும் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) தமிழரசி வழக்குப்பதிந்து, விஜயகுமாரையும், சதீசையும் தேடி வருகிறார்.
    Next Story
    ×