search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மனைவி திட்டியதால் தூக்குப்போட்டு தச்சுத்தொழிலாளி தற்கொலை

    ராமநத்தம் அருகே மனைவி திட்டியதால் தச்சுத்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராமநத்தம்:

    ராமநத்தம் அடுத்த வடகராம்பூண்டியை சேர்ந்தவர் அழகுவேல் மனைவி கருப்பாயி (வயது 42). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கருப்பாயியுடன் பழகி வந்த சிலரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அதன்படி மேலக்கல்பூண்டியை சேர்ந்த தங்கராசு மகன் தச்சுத்தொழிலாளி சுப்பிரமணியன் (48) என்பவரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். இந்த நிலையில் ஏன் தேவையில்லாமல் கருப்பாயியுடன் பழகி வந்தாய். இதனால் தற்போது பிரச்சினை வந்துள்ளது என்று கூறி சுப்பிரமணியனை அவருடைய தந்தை தங்கராசு, மனைவி அம்சவள்ளி ஆகியோர் திட்டியதாக தெரிகிறது.

    இதில் மனமுடைந்த சுப்பிரமணியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின் பேரில் ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சுப்பிரமணியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×