என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிவகங்கையில் போலி டாக்டர் கைது
Byமாலை மலர்4 Aug 2020 11:44 AM GMT (Updated: 4 Aug 2020 11:44 AM GMT)
சிவகங்கையில் டாக்டருக்கு படிக்காமல் கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
திருப்புவனம்:
சிவகங்கை மாவட்டம் பூவந்தி போலீஸ் சரகத்தை சேர்ந்தது திருமாஞ்சோலை பகுதி. இந்த பகுதியில் ராஜமாணிக்கம் (வயது34) என்பவர் கிளினிக் நடத்தி வருகிறார். இவர் முறையாக டாக்டருக்கு படிக்காமல் கிளினிக் நடத்தி வருவதாக மாவட்ட கலெக்டரிடம் புகார் கூறப்பட்டது.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவின்பேரில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன் தலைமையில் மருத்துவ குழுவினர் கிளினிக் சென்று சோதனை நடத்தினர். இதில் டாக்டருக்கு படிக்காமல் இவர் கிளினிக் நடத்தியது தெரிய வந்துள்ளது. இதையடுத்து மருத்துவ குழுவினர், போலி டாக்டர் ராஜமாணிக்கத்தை பூவந்தி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரிதாபாலு வழக்குப்பதிவு செய்து ராஜமாணிக்கத்தை கைது செய்து விசாரித்து வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X