என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொடர் மழையால் வெள்ளாறு தடுப்பணை நிரம்பியது- விவசாயிகள் மகிழ்ச்சி
Byமாலை மலர்3 Aug 2020 8:54 AM GMT (Updated: 3 Aug 2020 8:54 AM GMT)
தொடர் மழையால் வெள்ளாற்று தடுப்பணையில் நிரம்பி வழியும் தண்ணீரை அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் ஆர்வமுடன் கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள ஆலத்தியூர் பகுதியில் உள்ள வெள்ளாற்றில் புதிய தடுப்பணை கட்ட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதனை தொடர்ந்து குன்னம் எம்.எல்.ஏ. ஆர்.டி.ராமச்சந்திரன் வெள்ளாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கோரிக்கை விடுத்தார். அதனை தொடர்ந்து தமிழக முதல்- அமைச்சர் வெள்ளாற்றில் தடுப்பணை கட்ட ரூ.31 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டார். அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெள்ளாற்றில் தடுப்பணை கட்ட முன்னாள் ஒன்றிய செயலாளர் முள்ளுக்குறிச்சி சுரேஷ் அடிக்கல் நாட்டினார்.
தற்போது தடுப்பணை கட்டும் பணி முடிவடைந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக செந்துறை பகுதியில் ஆடி மாதத்தில் வரலாறு காணாத தொடர் மழை பெய்து வருகிறது. இந்த மழைநீர் காட்டாறுகள் ஆன ஆணைவழி ஓடை உள்ளிட்ட காட்டாறுகளில் பெருக்கெடுத்து ஓடி வெள்ளாற்றில் கலந்தது. இந்த மழைநீர் வெள்ளாற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் தேங்கி கடல் போல் காட்சியளிக்கிறது. ஆடிப்பெருக்கு அன்று வெள்ளாற்று தடுப்பணையில் நிரம்பி வழியும் தண்ணீரை அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் ஆர்வமுடன் கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X