search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரிசி
    X
    அரிசி

    ஒண்ணுபுரம், தண்டராம்பட்டில் மாணவர்களுக்கு அரிசி, பருப்பு வழங்கும் நிகழ்ச்சி

    ஒண்ணுபுரம், தண்டராம்பட்டில் மாணவர்களுக்கு அரிசி, பருப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள ஒண்ணுபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை சத்துணவு சாப்பிடும் 164 மாணவ, மாணவிகளுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் வசந்தராஜ், ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கினர். இதில் தலைமை ஆசிரியர் பாபு, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர் கோபி, கிளை செயலாளர் சரவணன், சத்துணவு அமைப்பாளர் ஜெயந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் பட்டதாரி ஆசிரியர் மோகன் நன்றி கூறினார்.

    இதேபோல தண்டராம்பட்டு ஒன்றியம் சாத்தனூர் ஊராட்சி மல்லிகாபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தலைமை ஆசிரியை மணிமேகலை தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அருள் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கினார். இதில் ஆசிரியர்கள் மற்றும் வார்டு உறுப்பினர் குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×