search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் ரூ.188 கோடிக்கு மது விற்பனை

    தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் நேற்று மட்டும் ரூ.188 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் 7-வது கட்ட ஊரடங்கின் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று தமிழகம் முழுவதும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

    இதனால் நேற்று மது பிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் நேற்று மட்டும் ரூ.188 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

    அதிகபட்சமாக மதுரையில் ரூ.44 கோடிக்கும், திருச்சியில் ரூ.42 கோடிக்கும், சேலத்தில் ரூ.40 கோடிக்கும், கோவையில் ரூ.38 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது. குறைந்த பட்சமாக சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் ரூ.21 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×