என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க கோரி இந்து முன்னணியினர் போராட்டம்
Byமாலை மலர்31 July 2020 10:06 AM GMT (Updated: 31 July 2020 10:06 AM GMT)
காரைக்குடி பகுதியில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க கோரி இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்குடி:
காரைக்குடி பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணி கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த பணியானது பெரும்பாலான இடங்களில் நிறைவு பெற்று ஒரு சில இடங்களில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் காரைக்குடி முதல் பீட் பகுதியில் இந்த பணிக்காக சாலையில் குழிகள் தோண்டப்பட்டு பணி நிறைவு பெற்றது. இதன் பின்னர் இந்த சாலையானது குண்டும், குழியுமாக காணப்பட்ட நிலையில் மழைக்காலங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில் இந்த சாலையை சீரமைக்ககோரி நேற்று இந்து முன்னணியினர் அக்னிபாலா தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் பூச்செடிகளுடன் அங்கு வந்து குண்டும், குழியுமான சாலையில் நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X