என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேன்கனிக்கோட்டை அருகே தக்காளி தோட்டத்தை நாசப்படுத்திய காட்டு யானைகள்
Byமாலை மலர்31 July 2020 8:25 AM GMT (Updated: 31 July 2020 8:25 AM GMT)
தேன்கனிக்கோட்டை அருகே தக்காளி தோட்டத்தை காட்டு யானைகள் நாசப்படுத்தின. இது தொடர்பாக வனத்துறையினர் தோட்டத்திற்கு சென்று சேதமான பயிர்களை பார்வையிட்டனர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மரக்கட்டா கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது 40), விவசாயி. இவர் தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில் ரூ.1½ லட்சம் செலவில் தக்காளி பயிரிட்டிருந்தார்.
இவரது தோட்டத்தில் தக்காளி நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்த நிலையில் அருகில் உள்ள நொகனூர் வனப்பகுதியிலிருந்து நேற்று முன்தினம் இரவு வந்த 3 காட்டுயானைகள் பாலாஜியின் தக்காளி தோட்டத்திற்குள் புகுந்து அறுவடைக்கு தயாரான தக்காளிகளை தின்றும்,
கால்களால் மிதித்தும் சேதப்படுத்தின.
நேற்று காலையில் தோட்டத்திற்கு வந்த பாலாஜி, சேதமான தக்காளி பயிர்களை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் தேன்கனிக்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து தேன்கனிகோட் டை வனச்சரகர் சுகுமார் தலைமையிலான வனத்துறையினர் பாலாஜியின் தோட்டத்திற்கு சென்று சேதமான பயிர்களை பார்வையிட்டனர்.
மேலும் அவருக்கு வனத்துறையினர் ஆறுதல்கூறினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X