search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டம்
    X
    போராட்டம்

    விவசாய தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம்

    குடியாத்தத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்தில், விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் கே.சாமிநாதன், தாலுகா செயலாளர் பி.குணசேகரன், தாலுகா தலைவர் நடராஜன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சக்திவேல், நிர்வாகிகள் பாண்டுரங்கன், நெடுஞ்செழியன், ராஜா உள்பட தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    இதனையடுத்து கொரோனா நிவாரண நிதியாக மாதம் தோறும் ரூ.12,500 வழங்க வேண்டும், 60 வயது ஆன அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குடியாத்தம் தாசில்தார் வத்சலாவிடம் மனு அளித்தனர்.
    Next Story
    ×