என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சாராயம் விற்ற பெண் உள்பட 3 பேர் கைது

    கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் பகுதியில் சாராயம் கடத்தல் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சிலரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கடம்பரவாழ்க்கை மெயின்ரோட்டை சேர்ந்த மாரியம்மாள் (வயது55), கொத்தமங்கலம் மெயின் ரோட்டை சேர்ந்த வேலவன்(55), நாகை வெளிப்பாளையம் பப்ளிக் ஆபீஸ் ரோட்டை சேர்ந்த மகாலிங்கம் (40) ஆகியோர் என்பதும், சாராயம் விற்றதும் தெரியவந்தது. 

    இதுகுறித்து கீழ்வேளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைதுசெய்து, அவர்களிடம் இருந்த 330 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×