என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செல்போன்கள் திருடிய சிறுவன் உள்பட 5 பேர் கைது
Byமாலை மலர்26 July 2020 1:27 PM GMT (Updated: 26 July 2020 1:27 PM GMT)
ஈரோடு அருகே செல்போன்கள் திருடிய சிறுவன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு சுண்ணாம்பு ஓடை ரோஜா நகர் பகுதியை சேர்ந்தவர் முகிலன் (வயது 38). இவர் பி.பி.அக்ரஹாரம் காமராஜ் நகர் பஸ் நிறுத்தம் அருகில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று முகிலன் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிச்சென்றார். மறுநாள் வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு 7 செல்போன்கள், சார்ஜர் உள்ளிட்டவைகளை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து முகிலன் இதுபற்றி ஈரோடு கருங்கல்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, செல்போன் திருட்டில் ஈடுபட்ட லக்காபுரம் வாய்க்கால்மேடு பகுதியை சேர்ந்த சங்கர் (23), பெரிய அக்ரஹாரம் வீட்டு வசதி வாரிய பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன், திருமூர்த்தி (22), காஜாமைதீன் (26), அபுபக்கர்சித்திக் (23) ஆகிய 5 பேரை நேற்று கைது செய்தனர். மேலும் பி.பி.அக்ரஹாரம் உதுமான்சா வீதியில் உள்ள ஓங்காளியம்மன் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த சுமார் ரூ.10 ஆயிரத்தை திருடிச்சென்ற வழங்கிலும் சங்கர், அபுபக்கர் சித்திக் மற்றும் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X