search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்த 27 மீனவர்கள் மீது வழக்கு

    கடலூர் மாவட்டத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்த 27 மீனவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    கடலூர் முதுநகர்:

    கடலூர் மாவட்டத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி வழங்க கோரி ஒரு தரப்பினரும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினரும் கடந்த சில வாரங்களாக அடிக்கடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் சிலர், அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி சம்பவத்தன்று மீன்பிடித்ததாக தெரிகிறது. 

    இதுபற்றி அறிந்த கடலூர் மீன்வளத்துறை உதவி இயக்குனர் ரம்யாலட்சுமி, கடலூர் துறைமுகம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் தேவனாம்பட்டினம் பகுதியை சேர்ந்த 27 மீனவர்கள் மீது துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×