என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்த 27 மீனவர்கள் மீது வழக்கு
Byமாலை மலர்26 July 2020 8:52 AM GMT (Updated: 26 July 2020 8:52 AM GMT)
கடலூர் மாவட்டத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்த 27 மீனவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கடலூர் முதுநகர்:
கடலூர் மாவட்டத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி வழங்க கோரி ஒரு தரப்பினரும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினரும் கடந்த சில வாரங்களாக அடிக்கடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் சிலர், அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி சம்பவத்தன்று மீன்பிடித்ததாக தெரிகிறது.
இதுபற்றி அறிந்த கடலூர் மீன்வளத்துறை உதவி இயக்குனர் ரம்யாலட்சுமி, கடலூர் துறைமுகம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் தேவனாம்பட்டினம் பகுதியை சேர்ந்த 27 மீனவர்கள் மீது துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X