என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கீழடியில் அகழாய்வு பணி- செங்கல் சுவர் கண்டுபிடிப்பு
Byமாலை மலர்23 July 2020 8:46 AM GMT (Updated: 23 July 2020 8:46 AM GMT)
கீழடியில் அகழாய்வு பணியின்போது புதிய குழி தோண்டியபோது சுமார் 5 அடி ஆழத்தில் புதிதாக ஒரு செங்கல் சுவர் இருப்பது தெரிய வந்தது.
திருப்புவனம்:
இந்நிலையில் மேலும் குழிகள் தோண்டி ஆராய்ச்சி பணிகள் நடைபெற்றபோது அதில் அகலமான செங்கல் சுவர் அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று புதிய குழி தோண்டி ஆராய்ச்சி நடைபெற்றபோது அதில் சுமார் 5 அடி ஆழத்தில் புதிதாக ஒரு செங்கல் சுவர் இருப்பது தெரிய வந்தது. மேலும் அதை தோண்டி ஆராய்ச்சி செய்தால் அதன் விரிவாக்கம் தெரிய வரும். இதுதவிர கூடுதல் குழிகள் தோண்டப்பட்டு வருகிறது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடி, மணலூர், கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளில் 6-வது கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. கீழடியில் ஏற்கனவே 8-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு ஆராய்ச்சி பணிகள் நடைபெற்றபோது அதில் சிறிய, பெரிய பானைகள், விலங்கின எலும்புக் கூடு, பலவரிசைகள் கொண்ட செங்கல் சுவர், வாய்க்கால் பகுதி போன்ற அமைப்பு, கருங்கல்லினால் ஆன 4 எடைகற்கள், கண்ணாடி மூலப்பொருட்கள், இரும்பு உலை கண்டுபிடிக்கப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X