search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பவானிசாகர் அணை
    X
    பவானிசாகர் அணை

    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 466 கன அடியாக குறைந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 83.58 அடியாக உள்ளது.
    பவானிசாகர்:

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக இருப்பது பவானிசாகர் அணை. 120 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 105 அடிக்கு தண்ணீரை திறந்துவிட முடியும். நீலகிரி மலை பகுதியே பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாகும். பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால் தண்ணீர் மூலம் சுமார் 2½ லட்சம் விவசாய விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் அணைக்கு வினாடிக்கு 3,089 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று மாலை 4 மணி அளவில் அது வினாடிக்கு 466 கன அடியாக குறைந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 83.58 அடியாக இருந்தது. அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலுக்கு வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 
    Next Story
    ×