என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

    அரியலூரில் சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தா.பழூர்:

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் பிள்ளையார்குளம் பகுதியில் வசிக்கும் ஒருவர் தனது 16 வயது மகளை காணவில்லை என தா.பழூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து தா.பழூர் போலீசார் விசாரணை நடத்தினர். 

    விசாரணையில், வேனாநல்லூர் காலனி தெருவை சேர்ந்த ரவி மகன் ராகுல்(வயது 21) என்பவர் சிறுமியை கடத்தி சென்றது தெரிய வந்தது. மேலும் அவர் அந்த சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரகலா போக்சோ சட்டத்தின் கீழ் ராகுலை கைது செய்தார். தொடர்ந்து மீட்கப்பட்ட சிறுமி சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
    Next Story
    ×