என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செல்போன் கடை பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் பொருட்கள் கொள்ளை
Byமாலை மலர்19 July 2020 9:35 AM GMT (Updated: 19 July 2020 9:35 AM GMT)
வேதாரண்யம் அருகே செல்போன் கடை பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் பொருட்கள் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே உள்ள செட்டிப்புலத்தை சேர்ந்தவர் முத்துக்குமரன் (வயது30). இவர் கரியாப்பட்டினம் கடைவீதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடைக்குள் சென்று பார்த்தபோது கடையில் இருந்த ரூ.16 ஆயிரம் மற்றும் செல்போன், மடிக்கணினி, சார்ஜர் உள்ளிட்ட ரூ.50 ஆயிரம் மதிப்புடைய பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து முத்துக்குமரன் கரியாப்பட்டினம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கரியாப்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராசேந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X