search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிவாரணம் பொருட்கள் வழங்கப்பட்ட காட்சி
    X
    நிவாரணம் பொருட்கள் வழங்கப்பட்ட காட்சி

    கட்டுப்பாட்டு பகுதி மக்களுக்கு நிவாரணம்- பாஸ்கர் எம்எல்ஏ வழங்கினார்

    முதலியார்பேட்டை தொகுதியில் கட்டுப்பாட்டு பகுதி மக்களுக்கு நிவாரணம் பொருட்களை பாஸ்கர் எம்எல்ஏ வழங்கினார்.
    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதி பழைய மார்க்கெட் வீதி, பாரதிதாசன் நகர், வேல்ராம்பட்டு, திருமகள் நகர் உள்பட பல்வேறு பகுதிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கட்டுப்பாட்டு மண்டலமாக உள்ளது. இந்த பகுதிகளில் வசிக்கும் சுமார் 200 குடும்பங்களுக்கு தொகுதியின் எம்.எல்.ஏ. பாஸ்கர் தனது சொந்த செலவில் 20 வகையான காய்கறிகள், 5 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியின்போது புதுச்சேரி தாசில்தார் ராஜேஷ் கண்ணா, முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, மருத்துவ அதிகாரி டாக்டர் சரண்யா, சுகாதார ஆய்வாளர் ரமேஷ், தமிழன்பன், முன்னாள் கவுன்சிலர் சத்யராஜ், தொகுதி செயலாளர் நாராயணன், சின்னத்தம்பி ஆகியோர் உடனிருந்தனர்.
    Next Story
    ×