search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கந்தர்வகோட்டை அருகே வாலிபர் தற்கொலை

    கந்தர்வகோட்டை அருகே திருமணம் ஆகாத ஏக்கத்தில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கந்தர்வகோட்டை:

    கந்தர்வகோட்டை அருகே உள்ள நரியன்குடிப்பட்டியை சேர்ந்த ரெங்கசாமியின் மகன் சாமிநாதன்(வயது 30). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த சாமிநாதன், திருமணம் ஆகாத ஏக்கத்தில் தனது விவசாய நிலத்திற்கு வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்து மயங்கி விழுந்தார். இதைக்கண்டவர்கள் அவரை மீட்டு, தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார். இது குறித்து ரெங்கசாமி அளித்த புகாரின்பேரில் கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×