search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்வு
    X
    தேர்வு

    பிளஸ்-2 மறுதேர்வு எழுதும் மாணவர்களுக்கு நுழைவுச்சீட்டு- பள்ளிக்கல்வி இயக்கக அதிகாரி தகவல்

    பிளஸ்-2 மறுதேர்வு எழுதும் மாணவர்கள் நுழைவுச்சீட்டுகளை தங்களது பள்ளி முதல்வர், துணை முதல்வரிடம் பெற்றுக்கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வி இயக்கக அதிகாரி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு பள்ளிக்கல்வி இயக்கக இணை இயக்குனர் குப்புசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிளஸ்-2 மாணவர்களுக்கு கடந்த 24.3.2020 அன்று நடைபெற இருந்த (வேதியியல், கணக்குபதிவியல், புவியியல்) தேர்வுகள் ஊரடங்கு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. இந்த மாணவர்கள் வருகிற 27-ந் தேதி ஏற்கனவே அவர்கள் படித்த பள்ளிகளிலேயே தேர்வு எழுதலாம். தனித்தேர்வர்கள் ஏற்கனவே பிற தேர்வுகளை எழுதிய மையங்களில் எழுதலாம்.

    மறுதேர்வு எழுதும் மாணவர்கள் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் வருகிற 17-ந் தேதி வரை புதிய தேர்வுக் கூட நுழைவுச்சீட்டுகளை தங்களது பள்ளி முதல்வர், துணை முதல்வரிடம் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பெற்றுக்கொள்ளலாம்.

    மேலும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று HALL TICKET என்ற வாசகத்தை ‘கிளிக்’ செய்து பதிவு எண், பிறந்த தேதியை குறிப்பிட்டு தேர்வுக் கூட அனுமதி சீட்டினை பதிவிறக்கம் செய்யலாம். தனித்தேர்வர்கள் ஏற்கனவே தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் நுழைவு சீட்டினை பெற்றுக்கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×