search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் செங்கோட்டையன்
    X
    அமைச்சர் செங்கோட்டையன்

    அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாகவே வகுப்புகள்- அமைச்சர் செங்கோட்டையன்

    அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி சேனல்கள் வாயிலாகவே வகுப்புகள் நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அடுத்த நம்பியூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

    அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி சேனல்கள் வாயிலாக வகுப்புகள் நடத்தப்படும். அதற்கு 3 சேனல்கள் இதுவரை ஒப்புதல் தெரிவித்துள்ளது.

    தற்போது அட்டவணைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் தொடங்கி வைத்த பின் வகுப்புகள் குறித்த முழு விவரங்கள் தெரிவிக்கப்படும்.

    பிளஸ்-2 தேர்வு எழுதாமல் விடுபட்ட மாணவர்களுக்கான தேர்வை 718 பேர் எழுத விருப்பம் தெரிவித்துள்ளனர். விடுபட்ட 34,842 மாணவர்களும் தேர்வெழுத வந்தாலும், அதற்கான ஏற்பாடுகள் செய்து தர அரசு தயாராக இருக்கிறது.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். 
    Next Story
    ×