என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் திடீர் ஆய்வு
Byமாலை மலர்9 July 2020 6:36 AM GMT (Updated: 9 July 2020 6:36 AM GMT)
புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், உணவு மற்றும் சுகாதார வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
அதையடுத்து மருத்துவமனை அதிகாரிகள், டாக்டர்கள், செவிலியர்களை சந்தித்து சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் குறித்தும் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் அவர், நோயாளிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேலும் மேம்படுத்தித் தருமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார். டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
இந்த ஆய்வின்போது சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார், கொரோனா மாநில ஒருங்கிணைப்பு அதிகாரி டாக்டர் ரமேஷ், மருத்துவ கண்காணிப்பாளர் வாசுதேவன் ஆகியோர் உடனிருந்தனர்.
புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், உணவு மற்றும் சுகாதார வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
அதையடுத்து மருத்துவமனை அதிகாரிகள், டாக்டர்கள், செவிலியர்களை சந்தித்து சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் குறித்தும் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் அவர், நோயாளிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேலும் மேம்படுத்தித் தருமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார். டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
இந்த ஆய்வின்போது சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார், கொரோனா மாநில ஒருங்கிணைப்பு அதிகாரி டாக்டர் ரமேஷ், மருத்துவ கண்காணிப்பாளர் வாசுதேவன் ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X