என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண்
    X
    புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண்

    புதுவை மேலும் 8 கட்டுப்பாட்டு மண்டலம்

    புதுவையில் மேலும் 8 இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலமாக கலெக்டர் அருண் அறிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரியில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர்கள் வசித்து வந்த பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.

    அதன்படி 1.மூலக்குளம் ஜெ.ஜெ.நகர் 8-வது குறுக்குத்தெரு, 2.ரெட்டியார்பாளையம் திலகர் நகர் 3-வது குறுக்குத்தெரு, 3.ரெட்டியார்பாளையம் திலகர் நகர் 2-வது குறுக்குத்தெரு, 4.தட்டாஞ்சாவடி முத்திரையர்பாளையம் நெல்லுமண்டி வீதி, 5.தட்டாஞ்சாவடி இந்திரா நகர் விரிவு விவேகானந்தா நகர், 6.லாஸ்பேட்டை செயிண்ட் பால்பேட் மாரியம்மன் கோவில் வீதி, 7.தட்டாஞ்சாவடி செயின்ட் ஜி.டி. நகர் மாரியம்மன் கோவில் வீதி, 8. ரெட்டியார்பாளையம் சாரதாம்பாள்நகர் அஜந்தா அப்பார்ட்மென்ட் ஆகிய 8 பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×