search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சார நிறுத்தம்
    X
    மின்சார நிறுத்தம்

    சேத்தியாத்தோப்பு, வளையமாதேவி பகுதியில் நாளை மின்நிறுத்தம்

    சேத்தியாத்தோப்பு, வளையமாதேவி பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
    சேத்தியாத்தோப்பு:

    சேத்தியாத்தோப்பு, வளையமாதேவி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சேத்தியாத்தோப்பு, பின்னலூர், எறும்பூர், ஒரத்தூர், சோழத்தரம், பாளையங்கோட்டை, கொழை, ராமாபுரம், கானூர், காவாலக்குடி, முடிகண்டநல்லூர், கொண்டசமுத்திரம், வானமாதேவி, அறந்தாங்கி, சித்தமல்லி, மஞ்சகொல்லை, மிராளூர், மருதூர், பி.உடையூர் மற்றும், வளையமாதேவி, முகந்தெரியாங்குப்பம், பெருவரப்பூர், சிறுவரப்பூர், கோட்டுமுளை, ஓட்டிமேடு, பெருந்துறை, க.புத்தூர், சாத்தப்பாடி, விளக்கப்பாடி, தட்டானோடை, அகரஆலம்பாடி, பி.ஆதனூர், உ.அகரம், தர்மநல்லூர், கத்தாழை, மும்முடிசோழகன், முத்துகிருஷ்ணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும். மேற்கண்ட தகவலை சிதம்பரம் மின்வாரிய செயற்பொறியாளர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×