என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டாஸ்மாக் பணியாளர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்
Byமாலை மலர்8 July 2020 7:14 AM GMT (Updated: 8 July 2020 7:14 AM GMT)
டாஸ்மாக் பணியாளர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று தமிழக டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில துணை தலைவர் குணசேகரன் கூறியுள்ளார்.
மீன்சுருட்டி:
தமிழக டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில துணை தலைவர் குணசேகரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக்கில் பொருள் குறைவு ஏற்பட்டதற்காக பணியாளர்களை மதுபாட்டில் குறைவு தொகை, 50 சதவீதம் அபராத தொகை, ஜி.எஸ்.டி. வரி ஆகியவற்றை கட்டக்கோரி கட்டாயப்படுத்துவது வன்மையாக இந்த தமிழக அரசு பணியாளர் சங்கம் கண்டிக்கிறது. முறையான விசாரணை செய்யாமல் இவ்வாறு கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஊரடங்கு காலத்தில் சில இடங்களில் திருட்டும், அரசியல் வாதிகள், புரோக்கர்கள் சேர்ந்து கட்டாயப்படுத்தி அதிகாரிகள் உடந்தையுடன் மது பாட்டில்களை எடுத்துள்ளனர். இதுபோன்ற மதுபாட்டில் குறைவுக்கு பணியாளர்களை மட்டும் தண்டிப்பது கண்டிக்கத்தக்கது. இதற்கு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். பின் விற்பனை தொகையை உரிய காலத்தில் கட்டிய பணியாளர்கள் மீது அபராத தொகை விதிக்கப்படுவது நிறுத்தி வைக்க வேண்டும். அதிவேகமாக கொரோனா வைரஸ் பரவும் நிலையில் பொதுமக்களுடன் டாஸ்மாக் பணியாளர்கள் நேரடி தொடர்பில் உள்ளதால் அனைத்து பணியாளர்களையும் உரிய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
தமிழக டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில துணை தலைவர் குணசேகரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக்கில் பொருள் குறைவு ஏற்பட்டதற்காக பணியாளர்களை மதுபாட்டில் குறைவு தொகை, 50 சதவீதம் அபராத தொகை, ஜி.எஸ்.டி. வரி ஆகியவற்றை கட்டக்கோரி கட்டாயப்படுத்துவது வன்மையாக இந்த தமிழக அரசு பணியாளர் சங்கம் கண்டிக்கிறது. முறையான விசாரணை செய்யாமல் இவ்வாறு கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஊரடங்கு காலத்தில் சில இடங்களில் திருட்டும், அரசியல் வாதிகள், புரோக்கர்கள் சேர்ந்து கட்டாயப்படுத்தி அதிகாரிகள் உடந்தையுடன் மது பாட்டில்களை எடுத்துள்ளனர். இதுபோன்ற மதுபாட்டில் குறைவுக்கு பணியாளர்களை மட்டும் தண்டிப்பது கண்டிக்கத்தக்கது. இதற்கு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். பின் விற்பனை தொகையை உரிய காலத்தில் கட்டிய பணியாளர்கள் மீது அபராத தொகை விதிக்கப்படுவது நிறுத்தி வைக்க வேண்டும். அதிவேகமாக கொரோனா வைரஸ் பரவும் நிலையில் பொதுமக்களுடன் டாஸ்மாக் பணியாளர்கள் நேரடி தொடர்பில் உள்ளதால் அனைத்து பணியாளர்களையும் உரிய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X