search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சித்தேரி அணைக்கட்டில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தியவர் கைது

    சித்தேரி அணைக்கட்டில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாகூர்:

    பாகூர் அருகே குருவிநத்தம் தென்பெண்ணையாறு சித்தேரி அணைக்கட்டில் இருந்து மணல் கடத்திச் செல்வதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து பாகூர் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் அந்த இடத்துக்கு விரைந்து சென்று கண்காணித்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டையில் மணல் கடத்திச் சென்றவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

    விசாரணையில் அவர் சோரியாங்குப்பம் நாகம்மாள் கோவில் தெருவை சேர்ந்த அசோக்ராஜன் (வயது 21) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் 6 மணல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    Next Story
    ×